வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை வகித்து பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உமாசாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார்.
ஆசிரியை தேவி சந்தனமாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், அவரது மனைவி ஆகியோர் தேர்வில் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்திப் பேசினர்.
சென்னைவாழ் வேப்பலோடை நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள், முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயமும் வழங்கினர்.
கருத்துக்கள்